அண்மைய செய்திகள்

recent
-

44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார் எலன் மஸ்க்

டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை சமீபத்தில் வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது அந்நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை கடந்த சில வாரங்களுக்கு முன் வாங்கினார். 

கடந்த 9ம் தேதி, டுவிட்டர் இயக்குனர் குழுவில் எலான் மஸ்க் இணைவதாக இருந்தது. இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்க இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரு தரப்புக்கும் இடையே முதற்கட்ட பேச்சு நடைபெற்றுள்ளது. கடந்த 14ம் தேதியன்று எலான் மஸ்க், ஒரு பங்கு 54.20 டாலர் என்ற விலையில், அதாவது, கிட்டத்தட்ட 3.31 லட்சம் கோடி ரூபாய்க்கு டுவிட்டரை வாங்க தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். டுவிட்டரை எலன் மஸ்க் முழுமையாக வாங்கியதால், பங்கு சந்தையில் டுவிட்டரின் விலை 3 லட்சம் கோடி வரை உயர்ந்தாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார் எலன் மஸ்க் Reviewed by Author on April 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.