மன்னாரில் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தமிழ் நாட்டு மக்கள் வழங்கிய அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க நடவடிக்கை.
குறித்த உணவுப்பொருட்கள் இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையில் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
முதற்கட்டமாக 6500 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 65,000 கிலோ உணவுப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மடு பிரதேச செயலகத்திற்கும் பொருட்கள் கொண்டு செல்லப்பட உள்ள நிலையில் நாளைய தினம் (31) நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலகங்களுக்கு, உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
மன்னாரில் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தமிழ் நாட்டு மக்கள் வழங்கிய அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க நடவடிக்கை.
Reviewed by Author
on
May 30, 2022
Rating:

No comments:
Post a Comment