மன்னாரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் பகுதியில் இரண்டு உறவுகளை பறிகொடுத்த தாயினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் நிகழ்விற்கு வருகை தந்த அனைவரும் மலர் தூவி தங்களுடைய அக வணக்கத்தை தெரிவித்தார்கள்
இதன்போது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக எந்த ஒரு நீதியான தீர்வும் சர்வதேசத்தாலோ இலங்கை அரசினாலோ இதுவரை கிடைக்கவில்லை என்ற பெற்றோரின் மனக்குமுறல்கள் மகஜராக வாசித்துக் காட்டப்பட்டது
அத்துடன் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் பணியாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனிதநேயச் செயற்பாட்டாளர் மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்
மன்னாரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
Reviewed by Author
on
May 18, 2022
Rating:

No comments:
Post a Comment