அண்மைய செய்திகள்

recent
-

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர்

எதிர்வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்களை பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லும் பணி இன்று ஆரம்பமாகியுள்ளது. பொலிஸ் பாதுகாப்பில் வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார். இதேவேளை, பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 

எனினும், பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு அரசாங்கம் விரைவில் தமது பஸ்களுக்கு டீசல் பெற்றுக் கொடுக்க உரிய முறைமையை உருவாக்க வேண்டும் என தனியார் பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன. தனியார் பேருந்துகளுக்கான டீசலை இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மூலம் பெற்றுக்கொள்வது நடைமுறைச் சாத்தியமற்றது என லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு விசேட அனுமதி வழங்கப் பட்டுள்ளது. 

அது நாளை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையாகும். இதன்படி, குறித்த காலப்பகுதியில் அவர்கள் அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்று பரீட்சை கடமை நியமனக் கடிதம் மற்றும் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். இது தொடர்பாக அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்களுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் Reviewed by Author on May 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.