எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு? வெளியாகிறது அறிவிப்பு?
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாளாந்தம் சுமார் 600 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விலை அதிகரிப்பு குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில் CPC இனால் இனியும் அத்தகைய இழப்பைத் தாங்க முடியாது எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், குறைந்த வருமானம் பெறும் மக்களின் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு மண்ணெண்ணெய் விலையை தற்போதைக்கு அதிகரிப்பதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை வட்டார தகவல்கள் தெரிவித்தன.
எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு? வெளியாகிறது அறிவிப்பு?
Reviewed by Author
on
May 23, 2022
Rating:

No comments:
Post a Comment