அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச தாதியர் தினம் இன்று

சுகாதார சேவையின் மகத்துவம் அன்றும் இன்றும் மிக முக்கிய சேவையாக காணப்படுகின்றது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) அறிமுகப்படுத்திய தாதிச் சேவை, உலக உயிர்வாழ்விற்கான இன்றியமையாத காரணியாக அமைந்துள்ளமையே அதற்கான காரணமாகும். நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த Florence Nightingale-இன் பிறந்த நாளான மே 12ஆம் நாளை சிறப்பாக நினைவுகூரும் வகையில் இன்றைய நாளில் சர்வதேச தாதியர் தினம் அனுஷ்ட்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 1899ஆம் ஆண்டில் சர்வதேச தாதியர்களுக்கான பேரவை எடுத்த தீர்மானத்திற்கமைவாக ஆண்டு தோறும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. 1939 ஆம் ஆண்டு முதல், முறையான தாதியர் சேவையை ஸ்தாபித்ததன் மூலம் நோயுற்றவர்களை இரவும் பகலும் கவனித்துக்கொள்ளும் தாதியர்களின் தலைமுறையை கௌரவிக்கும் வகையில் இலங்கையும் தாதியர் தினத்தை கொண்டாடுகின்றது. 

 தங்கள் உயிரை பணயம் வைத்து கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் செவிலியர்கள் தமது உன்னதச் சேவையை நாட்டுக்கு வழங்கியமையை எம்மால் மறந்துவிட முடியாது. கடமைக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானத்துடன் கூடிய இதயத்துடன், இந்த நாட்டிலுள்ள சுமார் 36,000 தாதியர்கள் ஓய்வின்றி தமது சேவையை தொடர்கின்றனர். 

 நோயுற்றவர்களை குணப்படுத்தி அவர்களுக்கு புத்துயிரளிக்கும் அளப்பரிய பணிக்காக அனைத்து தாதியர்களுக்கும் நியூமன்னார் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்…

சர்வதேச தாதியர் தினம் இன்று Reviewed by Author on May 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.