அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் பெறுமதியான கடல் அட்டைகள் மீட்பு.

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான 480 கிலோ கடல் அட்டைகள் மண்டபம் அருகே இன்று வியாழக்கிழமை (30) மாலை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

 இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 480 கிலோ எடை கொண்ட கடல் அட்டையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையில் சர்வதேச மதிப்பு 50 லட்சம் இருக்கும் என வனத்துறை தெரிவித்துள்ளனர்






.
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் பெறுமதியான கடல் அட்டைகள் மீட்பு. Reviewed by Author on June 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.