மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத் திருவிழா ஆரம்பம்.
-தொடர்ந்து எதிர்வரும் 5 நாட்கள் இக்கிரிகைககள் இடம் பெறும்.எதிர்வரும் 3 ஆம்,4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.
-6 ஆம் திகதி வியாழக்கிழமை(06-07-2022) அன்று மஹா கும்பாபிஷேக பெருவிழா இடம்பெறவுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து வருகை தந்த பிரதம சிவாச்சாரியார்களின் தலைமையில் ஆரம்பமாகிய இந்த கும்பாபிஷேக திருவிழா ஓதுவார் மூர்த்திகளின் வேத மந்திர பாராயணங்களுடன் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
எதிர்வரும் ஜூலை 6 திகதி கௌரி அம்பாள் உடனுறை திருக்கேதீஸ்வரப் பெருமானுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பூஜைகள் நடைபெற்று கருவறை இறைவனுக்கு எண்ணைக்காப்பு சாத்திரம் வைபவம் மிகவும் சிறப்பாக இடம்பெற உள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வெளியிடத்து பக்தர்கள் வருகை
குறைவாக இருந்தாலும் கும்பாபிஷேக பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத் திருவிழா ஆரம்பம்.
Reviewed by Author
on
June 30, 2022
Rating:

No comments:
Post a Comment