அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வாகனங்களுக்கு பெட்ரோல் விநியோகம்-

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (30) காலை முதல் வாகனங் களுக்கான எரிபொருள் (பெட்ரோல்) வழங்கப்பட்டது. இராணுவம் மற்றும் கடற்படையின் உதவியுடன் மன்னார் பிரதேசச் செயலக பணியாளர்களின் மேற்பார்வையில் வாகனங்களுக்கு பெட்ரோல் வினியோகிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிலுக்கு 1500 ரூபாவிற்கும்,முச்சக்கர வண்டிக்கு 2000 ரூபா விற்கும்,கார் உட்பட ஏனைய பெட்ரோல் வாகனங்களுக்கு 2500 ரூபாவிற்கும் எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வினியொகிக்கப்பட்டுள்ளது. 

 மன்னார் மாவட்டத்தில் உள்ள ஏனைய எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் வினியோகிக்கப் படாமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். இந்த நிலையிலே -மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (30) காலை முதல் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு டோக்கன் அடிப்படையில் எரிபொருள் வினியோகிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது\











.
மன்னார் ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வாகனங்களுக்கு பெட்ரோல் விநியோகம்- Reviewed by Author on June 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.