மன்னாரில் சுகாதார பணியாளர்களுக்கு 2வது தடவையாக எரிபொருள் விநியோகம்
இதன்போது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கை அளித்திருந்தனர்.
இந்நிலையில் சுகாதார ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் முதல் கட்டமாக கடந்த 2 ஆம் திகதி விசேட ஏற்பாட்டின் கீழ் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் (16) சனிக்கிழமை 2 ஆவது தடவையாக சுகாதார பணிப்பாளர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் மேற்பார்வையில்,கடற்படை,இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எவ்வித தடங்கலும் இன்றி எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சுகாதார பணியாளர்களுக்கு 2வது தடவையாக எரிபொருள் விநியோகம்
Reviewed by Author
on
July 16, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment