மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் எரிபொருள் அட்டையின் ஊடாக ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்.
-நாளை ஞாயிற்றுக்கிழமை(17) காலை 8 மணி முதல் மதியம் 10-20 மணி வரை சாவற்கட்டு கிராம மக்களும்,12-15 மணி முதல் 3.30 மணி வரை சின்னக்கடை கிராம மக்களும்,மாலை 3.30 மணி முதல் 6 மணி வரையும்,இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை மூர்வீதி கிராம மக்களும் தமது வாகனங்களுக்கு எரிபொருளை(பெட்ரோல்) பெற்றுக்கொள்ள முடியும்.
எதிர் வரும் திங்கட்கிழமை (18) காலை 8 மணி முதல் 10.20 மணி வரையும்,மதியம் 12.15 மணி முதல் மாலை 4 மணி வரை எமில் நகர் கிராம மக்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் தெரிவித்தார்.
குறித்த கிராமங்களை தவிர்ந்த ஏனைய கிராம மக்களுக்கு குறித்த தினங்களில் வழங்கப்பட மாட்டாது.ஏனைய கிராமங்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் எரிபொருள் அட்டையின் ஊடாக ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்.
Reviewed by Author
on
July 16, 2022
Rating:
No comments:
Post a Comment