அண்மைய செய்திகள்

recent
-

நாளை முதல் QR முறை மூலம் மட்டுமே எரிபொருள்

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாளை முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது. எனினும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்களுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுமாறு வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொது மக்களிடம் கோரியுள்ளார். இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை என்ற QR முறைமைக்கு இன்று முதல் வாகன வருமான அனுமதி பத்திரத்தை கொண்டு பதிவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமைக்காக, இதுவரையில் 46 இலட்சத்து 91 ஆயிரத்து 149 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, சகல முச்சக்கரவண்டிகளையும் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து, அவற்றுக்காக அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை ஒதுக்கி கொள்ள வேண்டும். மேலும் நாளைய தினம் முதல் QR முறை மூலம் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்றைய தினம் வாகன இலக்க தகடுகளில் 3,4 மற்றும் 5 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகிறது.


நாளை முதல் QR முறை மூலம் மட்டுமே எரிபொருள் Reviewed by Author on July 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.