அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் அதன் சுமையை பொருளாதாரக் கட்டமைப்பு சார்ந்த அனைத்துத்தரப்பினரும் சமளவில் தாங்கிக்கொள்ளவேண்டும். அதன்படி நாட்டின் நலனை முன்னிலைப்படுத்தி நாமனைவரும் முன்நோக்கிப் பயணிப்பதை இலக்காகக்கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயப்பரிமாற்றம் தொடர்பான வழிகாட்டல்கள், ஏற்றுமதி மட்டுப்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதுடன் அவை உரியவாறு பின்பற்றப்படுகின்றதாவென உறுதிப்படுத்தப்படும். அதனைமீறி செயற்படும் தரப்பினருக்கு எதிராக உரிய சட்டத்தின் பிரகாரம் மிகவும் வலுவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்திருக்கின்றது. 

 இதுகுறித்து மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டுமக்கள்மீது ஏற்பட்டிருக்கும் தாக்கத்தைக் குறைப்பதற்கு அரசாங்கமும் மத்திய வங்கியும் ஒன்றிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. தற்போதைய நெருக்கடிக்கும், அது மேலும் தீவிரமடைவதற்கும் நாட்டின் வங்கிக்கட்டமைப்பில் திரவத்தன்மை கூடிய வெளிநாட்டுக்கையிருப்பின் அளவு மிகவும் குறைவான மட்டத்தில் காணப்படுகின்றமையே முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.

 வெளிநாட்டுக் கையிருப்பு வீழ்ச்சியானது எரிபொருள் உள்ளடங்கலாக அத்தியாவசியப்பொருட்களின் இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் வங்கிக்கட்டமைப்பிடம் போதியளவிலான வெளிநாட்டுக்கையிருப்பு காணப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு மத்திய வங்கியானது ஏற்றுமதிகள் மூலமான வருமானத்திற்கு சில மட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலையிருக்கின்றது.


இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை Reviewed by Author on July 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.