அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 33 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் கைது

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாட்டிற்கு செல்ல முயன்ற 33 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பை அண்மித்த கடற்பிராந்தியத்தில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. 19 ஆண்களும் 09 பெண்களும் 05 சிறார்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த நீண்டநாள் மீன்பிடி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 சிலாபம், திருகோணமலை, மாரவில, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 33 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் கைது Reviewed by Author on July 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.