ஜனாதிபதியுடனான சந்திப்பில் 3 முக்கிய செயன்முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள்
எல்லாவற்றுக்கும் மேலாக கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் உரிமைக்கு மேலாக சிவில் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
“இலங்கையை மீண்டும் அப்பாதையில் கொண்டு வருவதற்கு வெளிநாட்டு விவகாரங்களில் கூட்டு மற்றும் உள்ளடக்கிய நடவடிக்கை தேவை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” எனத் தூதுவர்கள் தெரிவித்தனர்.
பின்வரும் 3 முக்கிய செயன்முறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியை ஊக்குவிப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
1.ஜீஎஸ்பி +
2.சர்வதேச நாணய நிதியம்
3.மனித உரிமைகள் பேரவை
இந்தச் செயன்முறைகளை வெற்றியடையச் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்புவதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு மேலும் கூறியுள்ளது.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் 3 முக்கிய செயன்முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள்
Reviewed by Author
on
August 11, 2022
Rating:
Reviewed by Author
on
August 11, 2022
Rating:


No comments:
Post a Comment