அமரகீர்த்தி அத்துகோரள அணிந்திருந்த தங்க மோதிரங்களை திருடிய சந்தேக நபர்கள் கைது
அத்துடன், தாக்குதலின் போது பாராளுமன்ற உறுப்பினர் அணிந்திருந்த மற்றுமொரு தங்க மோதிரத்தை திருடிய சந்தேக நபர் ஒருவர் நிட்டம்புவ பிரதேசத்தில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் 30 மற்றும் 38 வயதுடைய நிட்டம்புவ மற்றும் ரன்பொகுனுகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் நேற்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி நிட்டம்புவ நகரில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 37 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
.
.
அமரகீர்த்தி அத்துகோரள அணிந்திருந்த தங்க மோதிரங்களை திருடிய சந்தேக நபர்கள் கைது
Reviewed by Author
on
August 10, 2022
Rating:
Reviewed by Author
on
August 10, 2022
Rating:


No comments:
Post a Comment