அண்மைய செய்திகள்

recent
-

ஊஞ்சலில் இருந்து தவறி விழுந்த மாணவர் உயிரிழப்பு

மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை இடைவேளையின் போது குறித்த மாணவர் சக மாணவர்களுடன் இரும்பு ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த போது அதிலிருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 உயிரிழந்த மாணவர் 14 வயதுடையவர் என்பதுடன் மொறட்டுவை, பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


ஊஞ்சலில் இருந்து தவறி விழுந்த மாணவர் உயிரிழப்பு Reviewed by Author on August 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.