அண்மைய செய்திகள்

recent
-

காலி முகத்திடலில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை உடனடியாக வௌியேறுமாறு அறிவிப்பு

காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள போராட்டக்காரர்களை உடனடியாக வௌியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு முன்னர் சட்டவிரோதமாகவுள்ள தற்காலிக கூடாரங்களை அகற்றிவிட்டு, அங்கிருந்து வௌியேறுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 அரச மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கூடாரங்களையும் பயிர் செய்கைகளையும் அங்கிருந்து அகற்ற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள சட்டங்களை மீறி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிக்கை மூலம் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

காலி முகத்திடலில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை உடனடியாக வௌியேறுமாறு அறிவிப்பு Reviewed by Author on August 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.