அண்மைய செய்திகள்

recent
-

கடமைகளை செய்யாத அரச ஊழியர்களை சேவையை விட்டு வெளியேற வேண்டும்

கடமைகளை சரியாக செய்யாத அரச ஊழியர்கள் உடனடியாக சேவையை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபையில் உரையாற்றிய அவர் நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது நோக்கமாகும் என குறிப்பிட்டார். மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து ஆராய்வதற்கும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும் பொதுத் துறை அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் மாகாணப் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 தாமதிக்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப தன்னுடன் கைகோர்க்குமாறு, தான் அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டுக்கு புதிய அரசியல் கருத்துருவும் ஒழுக்கமான அரசியல் பயணமும் தேவை என வலியுறுத்திய ஜனாதிபதி, பழைய ஆட்சி முறை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அடிமட்டத்தில் உள்ள பொதுத்துறை ஊழியர்கள் தங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.


கடமைகளை செய்யாத அரச ஊழியர்களை சேவையை விட்டு வெளியேற வேண்டும் Reviewed by Author on August 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.