கடமைகளை செய்யாத அரச ஊழியர்களை சேவையை விட்டு வெளியேற வேண்டும்
தாமதிக்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப தன்னுடன் கைகோர்க்குமாறு, தான் அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டுக்கு புதிய அரசியல் கருத்துருவும் ஒழுக்கமான அரசியல் பயணமும் தேவை என வலியுறுத்திய ஜனாதிபதி, பழைய ஆட்சி முறை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அடிமட்டத்தில் உள்ள பொதுத்துறை ஊழியர்கள் தங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கடமைகளை செய்யாத அரச ஊழியர்களை சேவையை விட்டு வெளியேற வேண்டும்
Reviewed by Author
on
August 22, 2022
Rating:

No comments:
Post a Comment