அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலை மண்ணில் இளவயதில் ஒரு புதிய பணிப்பாளர்!


திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.கணபதிப்பிள்ளை அரியநாகம் மற்றும் ஆசிரியை பத்மலோஜினி அரியநாகம் தம்பதிகளின் இரண்டாவது மகளாவார். 1994 ஆம் ஆண்டு திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நுழைந்தார். 2007 ஆம் ஆண்டு வர்த்தகப் பிரிவில் சித்தியடைந்து கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் துறையில் பட்டம் பெறுவதற்காக அந்தப் பாடசாலையை விட்டு வெளியேறினார். அங்கு, முதல் வகுப்பில் தேர்ச்சியுடன் சந்தைப்படுத்தலில் இளங்கலைப் பட்டத்தை வென்றார். 2014ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் இருந்து விடைபெற்று அதே ஆண்டில் திருகோணமலை பிரதேச செயலகத்தின் காணிப்பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக அரச சேவையில் பிரவேசித்தார். 

அதே வருடத்தில் வேலையை விட்டுவிட்டு இலங்கை வங்கியில் நிர்வாக உதவியாளராக சேர்ந்தார். மிகவும் திறமையான நபராக அனைவராலும் அறியப்பட்ட ஷரண்யா, 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் 1 ஆம் திகதி இலங்கை நிருவாக சேவையில் இணைந்து கொண்டதுடன் முறையான பயிற்சியின் பின்னர் 2015 டிசம்பர் 7 ஆம் திகதி கிழக்கு மாகாண நன்னடத்தை திணைக்களத்தின் உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 2017 இல் தங்க விருதுடன் பொது நிர்வாகத்தில் முதுகலை டிப்ளமோ முடித்தார். 2021 ஆம் ஆண்டு, கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பதில் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 

2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03 ஆம் திகதி கிழக்கு மாகாண கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் பணிபுரியும் ஒவ்வொரு இடத்திலும் தனது மக்களுக்கு இனம், மதம், மொழி வேறுபாடு தாண்டி தன்னாலான சேவைகளை விரைவாகவும் திறமையாகவும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர் தனது தனிப்பட்ட நிதியையும் தாராளமாக வழங்கும் பக்குவம் படைத்தவர். இவரைப் போன்றவர்கள் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணம். 

திருகோணமலை மண்ணில் இளவயதில் ஒரு புதிய பணிப்பாளர்! Reviewed by Author on August 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.