பாகிஸ்தான் போர்க்கப்பல் 15ஆம் திகதி வரை இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும்
இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘பிஎன்எஸ் தைமூர்’ என்ற கப்பலின் மொத்த நீளம் 134 மீற்றர் ஆகும்.
PNS தைமூர் கட்டளை அதிகாரிக்கும் இலங்கை கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று கொழும்பு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இலங்கையில் நங்கூறமிட்டிருக்கும். குறித்த காலப்பகுதியில் இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடாத்தப்படவுள்ளன.
அத்தோடு கடற்படை பயிற்சி நிகழ்வொன்றும் திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் போர்க்கப்பல் 15ஆம் திகதி வரை இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும்
Reviewed by Author
on
August 12, 2022
Rating:
Reviewed by Author
on
August 12, 2022
Rating:


No comments:
Post a Comment