முட்டை விலையில் மாற்றமில்லை - பொது மக்கள் கவலை!
இந்த நாட்டில் பொது மக்கள் நலன் கருதி வெளியிடப்படும் எந்த ஒரு சட்டமும் அல்லது அறிவுறுத்தல்களும் எந்த வர்த்தகரும் பின்பற்றுவதில்லை எனவும் இதற்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளோ பொறுப்பு வாய்ந்த உத்தியோகஸ்த்தர்களோ நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் அத்தியவசிய பொருட்களுக்கு விலை அதிகரிக்கும் போது, வர்த்தகர்கள் உடன் விலையை அதிகரிப்பதாகவும் விலை குறையும் போது விலை குறைப்பு இடம்பெறுவதில்லை எனவும் பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாட்டு மக்கள் பொருளாதார வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வர்த்தக சமூகம் இவ்வாறு பொது மக்களிடம் இருந்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிவது போல் நடந்து கொள்வது மிகவும் மோசமான நிலை எனவும் பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முட்டை விலையில் மாற்றமில்லை - பொது மக்கள் கவலை!
Reviewed by Author
on
August 22, 2022
Rating:

No comments:
Post a Comment