அண்மைய செய்திகள்

recent
-

பாறையிலிருந்து வீழ்ந்து பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

மாவனல்லை, உத்துவன்கந்த, சரதியல் மலையில் இருந்து தவறி விழுந்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுகொண்டு உதவி விவசாய ஆலோசகராக பணியாற்றிய வரும் யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தைச் சேர்ந்த 58 பேர் கொண்ட குழுவொன்று உத்துவன்கந்த பிரதேசத்திற்கு சுற்றுலாவிற்காக இன்று (22) சென்றிருந்தனர். இதன்போது விரஷ்மி கொடிதுவுக்கு என்ற 27 வயதுடைய யுவதி மலையில் ஏறும் போது தவறி கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த யுவதி மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாறையிலிருந்து வீழ்ந்து பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு Reviewed by Author on August 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.