அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டை, சுறா மீன் துடுப்பு பறிமுதல்,

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே புளித்தோப்பு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் சுறா மீன் துடுப்புகளை ஒரு நாட்டு படகில் ஏற்றி தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

 இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற கியூ பிரிவு போலீசார் கடல் அட்டை மற்றும் சுறா மீன் துடுப்புகளை பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு நாட்டுப் படகு மற்றும் அதில் தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் சர்வதேச மதிப்பு 50 கோடி ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டை, சுறா மீன் துடுப்பு பறிமுதல், Reviewed by Author on August 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.