யாழ்ப்பாணம் மயிலிட்டி கடற்கரை துறைமுகத்திற்கு அருகில்கெளரவமான அரசியல் தீர்வு கோரி போராட்டம்
குறித்த செயல் திட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களால் 100 நாள் செயற்திட்டத்திற்கான பொது மகஜர் வாசிக்கப்பட்டது டன் வருகை தந்த பொது மக்களுக்கு அரசியல் தீர்வு திட்டம் மற்றும் 13 ஆம் திருத்த சட்டம் தொடர்பான சாதக பாதக விளைவுகள் தொடர்பாக சட்டத்தரணி சிவஸ்கந்த சிறி தெளிவுபடுத்தல் வழங்கினார். .
-மேலும் கலந்து கொண்ட மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ கருத்துக்களை வழங்கினார்.
அதே நேரம் அரசியல் தீர்வு விடயத்தில் மக்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான கருத்துக்களும் உள் வாங்கப்பட்டது.
குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
யாழ்ப்பாணம் மயிலிட்டி கடற்கரை துறைமுகத்திற்கு அருகில்கெளரவமான அரசியல் தீர்வு கோரி போராட்டம்
Reviewed by Author
on
September 11, 2022
Rating:

No comments:
Post a Comment