அண்மைய செய்திகள்

recent
-

இதுவரை 500 இலங்கை வைத்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளனர் – சுகாதாரத் துறையில் கடுமையான பாதிப்பு

கடந்த 8 மாதங்களில் சுமார் 500 இலங்கை வைத்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

 இந்நிலைமை பாரதூரமான விடயம் எனவும் கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாடு சென்ற வைத்தியர்கள் பலர் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார். அதன் காரணமாக இராஜினாமா அறிவித்தல் விடுத்துள்ள வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் அதிகமாக உள்ளதாக வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டார். வைத்தியர்கள் நாட்டைவிட்டு செல்வது நாட்டின் சுகாதாரத் துறையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை 500 இலங்கை வைத்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளனர் – சுகாதாரத் துறையில் கடுமையான பாதிப்பு Reviewed by Author on September 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.