அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மரணிப் போரின் இறுதி அஞ்சலி செலுத்த அமைக்கப்பட்ட புதிய அஞ்சலி மண்டபம் திறந்து வைப்பு.

மன்னாரில் மரணிப் போரின் இறுதி அஞ்சலி செலுத்த மன்னார் நகர சபையினால் அமைக்கப்பட்ட புதிய அஞ்சலி மண்டபம் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட் டுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார். மன்னார் நகரசபையின் 6.90 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக பொது மண்டபம் மன்னார் பொது சேமக்காலை பகுதியில் அமைக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை(24) மதியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

 மரணித்தவர்களை வீட்டில் வைத்து இறுதி நிகழ்வுகள் செய்ய வசதியற்றவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் குறித்த அஞ்சலி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதன் முதலாக சபையின் நிதியூடாக மயானத்தில் அமைக்கப்பட்ட மண்டபமாக அமைகிறது. இதை நகர சபையின் அனுமதியுடன் யாரும் பயன்படுத்த முடியும். மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் மன்னார் நகர சபையின் உறுப்பினர்கள் செயலாளர், சபையில் உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.






மன்னாரில் மரணிப் போரின் இறுதி அஞ்சலி செலுத்த அமைக்கப்பட்ட புதிய அஞ்சலி மண்டபம் திறந்து வைப்பு. Reviewed by Author on September 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.