அருள் தரும் நவராத்திரி விரதத்தின் எட்டாம் நாள் இன்று!
நவராத்திரி நாள் 8: அக்டோபர் 3, திங்கட்கிழமை
வழிபட வேண்டிய சக்தி தேவி: ஸ்ரீ துர்கா தேவி, நரசிம்ம தாரணி, மகா கெளரி
திதி: அஷ்டமி
நிறம்: மயில் பச்சை
மலர்: சம்பங்கி, குருவாட்சி
கோலம்: பத்ம கோலம்
ராகம்: புன்னாக வராளி ராக
நைவேத்தியம்: காலை நேரத்தில் பால் சாதம் மற்றும் மாலை நேரத்தில் மொச்சைப் சுண்டல்
மந்திரம்: ஸ்ரீ துர்கா தேவி அஷ்டோத்திரம்
பலன்கள்: தோஷம் நீங்கும், திருமணத் தடை விலகும், கண் திருஷ்டி விலகும், ஏவல் சூனியம் பயம் நீங்கும்
நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள், சரஸ்வதி தேவிக்கான நாட்களாக கொண்டாடப்படுவதால், கலைமகளை வணங்கலாம்.
அஷ்டமி திதி மிகவும் தனித்துவமானது. துர்கா தேவியின் அம்சங்களான 7 கன்னி மார்களும், 64 யோகினிகளும் ஒன்றிணைந்து செயல்படும் நாள் தான் துர்காஷ்டமி. அதீத சக்தி படைத்த அம்மனின் சொரூபம் அஷ்டமி நாளன்று தோன்றியது என்று கூறப்படுவதுண்டு. நவதுர்க்கையின் வடிவங்களில் ஒன்றான மகா கெளரி அம்மனை துர்காஷ்டமி அன்று வணங்கி வழிபட்டால், கண் திருஷ்டி விலகும். மற்றவர்கள் உங்களுக்கு வைத்த செய்வினைகள் விலகும், மனதில் இருக்கும் பயம் முற்றிலுமாக அகலும்.
பூஜை செய்யும் முறை:
பூஜை அறையிலேயே கொலு வைத்திருந்தால், கொலுவுக்கு முன்பு அமர்ந்து, தினசரி அந்தந்த தேவியருக்கான மந்திரத்தை பாராயணம் செய்யலாம். துர்காஷ்டமி அன்று அம்மனுக்கு உரித்தான மந்திரங்கள், பாடல்கள் ஒலித்து சிறப்பு பூஜை செய்யலாம்.
2 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளை வரவேற்று, அவர்களுக்கு விருந்தளித்து அல்லது கண்ணாடி வளையல், போட்டு, மருதாணி, சீப்பு, கண்ணாடி ஆகியவற்றை தாம்பூலத்தில் கொடுத்து அவர்களை வணங்கி ஆசி பெறலாம்,
கொலு வைக்கப்பட்ட இடத்தில், பத்ம கோலம் இட்டு, விளக்குகள் ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, நைவேத்தியம் வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும். கொலு வைத்த இடமும் பூஜை அறையும் தனித்தனியாக இருந்தால், இரண்டு இடங்களிலும் விளக்கேற்றி, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.
அஷ்டமி என்பதால், ராகு காலத்தில் அம்மன் சன்னதிக்கு சென்று எலுமிச்சை விளக்கேற்றி வழிபடலாம்.
பூஜைக்கான நேரம்:
காலை 7.30 மணிக்குள், 9 முதல் 11 மணி வரை
மாலை 6 மணிக்கு மேல்
நவராத்திரிக்கு கொலு வைக்காதவர்கள் எவ்வாறு பூஜை மற்றும் விரதத்தை கடைபிடிக்கலாம்
கொலு வைக்காதவர்கள், அகண்ட தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனைகளை முன்வைக்கலாம். அகண்ட தீபம் என்றால் அணையா விளக்கு. அகண்ட தீபம் என்பது, வழக்கமாக நாம் ஏற்றும் அகல் தீபத்தைத் தான் குறிக்கிறது. இது வரை அகண்ட தீபம் எற்றாதவர்கள் கூட ஏற்றி வழபடலாம்.
காலை, மாலை, இரவென்று அகண்ட தீபம் அணையாமல் 9 நாட்களும் எரிய வேண்டும். கொலு தவிர்த்து, மீதியுள்ள அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிக்கலாம். சப்தமி திதியில், கலைமகளை வேண்டி, கல்வி, கலைகளில் சிறந்து விளங்க, நவராத்திரியின் எட்டாம் நாளில் ஏற்றி இரண்டு நாட்களுக்கு அகண்ட தீபம் அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நவராத்திரி தொடக்க நாளன்று ஏற்ற முடியாதவர்கள், ராகு காலம் எமகண்டம் தவிர்த்து, நவராத்திருக்கு பூஜை செய்யும் முன்பு, நன்றாக பிரார்த்தித்து அகண்ட தீபம் ஏற்றலாம்
அருள் தரும் நவராத்திரி விரதத்தின் எட்டாம் நாள் இன்று!
Reviewed by Author
on
October 03, 2022
Rating:

No comments:
Post a Comment