பூநகரி - கிராஞ்சி இலவன் குடா கடற்பகுதியில் பாரம்பரியமாக சிறகு வலை தொழிலில் ஈடுபட்டு வரும் கடற்தொழிலாளர்கள் 3 வது நாளாக இன்று போராட்டத்தை முன்னெடுப்பு.
இந்நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் தற்போது கடலட்டை பண்ணைகள் அமைக்கும் முயற்சிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதனை தொடர்ந்து கடற்தொழிலாளர்கள் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் சாதகமான முடிவை சம்மந்தப்பட்டவர்கள் வழங்கும் வரை தாம் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
-இந்த நிலையில் மீனவர்கள் உள்ளடங்களாக மக்கள் முகம் கொடுத்து வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கை கொடுத்து மனிதாபிமான பணியில் ஈடுபட்டு வருகின்ற மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேற்று சனிக்கிழமை (1) மதியம் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் போது குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோஇமற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது குறித்த மீனவர்களின் பிரச்சினைகளை குறித்த குழுவினர் கேட்டறிந்தனர்.
-இந்த நிலையில் தமக்காக ஒரு அமைப்பு ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில் தமது உரிமைகளை வென்றெடுக்க உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டு,தமது போராட்ட வடிவை மாற்றி சுழற்சி முறையில் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் 3வது நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமை(2) தமது போராட்டத்தை குறித்த மீனவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
பூநகரி - கிராஞ்சி இலவன் குடா கடற்பகுதியில் பாரம்பரியமாக சிறகு வலை தொழிலில் ஈடுபட்டு வரும் கடற்தொழிலாளர்கள் 3 வது நாளாக இன்று போராட்டத்தை முன்னெடுப்பு.
Reviewed by Author
on
October 02, 2022
Rating:

No comments:
Post a Comment