அண்மைய செய்திகள்

recent
-

தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் பலி


துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கதிர்காமம், தெட்டகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 5 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏர் ரைபிள் தவறுதலாக வெடித்ததால் சிறுவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 இதில் பலத்த காயமடைந்த சிறுவன் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளது. 18 வயதுடைய இளைஞன் எடுத்துச் சென்ற ஏர் ரைபிள் ஒன்றே இவ்வாறு தவறுதலாக வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் பலி Reviewed by Author on November 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.