சீரற்ற காலநிலை காரணமாக பெண் ஒருவர் பலி!
நேற்று மாலை பெரிய கல்லாறில் இருந்து 40ஆம் கிராமத்திற்கு பஸ்ஸில் வந்திறங்கி மயான வீதியால் நடந்து சென்று கொண்டிருக்கும் போதே அவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று காலையே அப்பகுதியால் சென்றவர்கள் சடலத்தினை கண்டு பிரதேச கிராம சேவையாளருக்கு அறிவித்துள்ள நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடுமையான குளிர் மற்றும் மழையுடனான காலநிலை நிலவிவரும் நிலையில் அதன் காரணமாக குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதிக்கு சென்ற வெல்லாவெளி பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
சீரற்ற காலநிலை காரணமாக பெண் ஒருவர் பலி!
Reviewed by Author
on
December 09, 2022
Rating:

No comments:
Post a Comment