மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான அரசின் தீர்மானம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட விசாரணை
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றமை தொடர்பில் ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்தி அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலதிக செயலாளர் மற்றும் இலங்கை மின்சார சபையின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதுடன், தேவைப்படும் பட்சத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடமும் விடயங்களை கேட்டறிய எதிர்பார்ப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.
மிக விரைவாக விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கையை வௌியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான அரசின் தீர்மானம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட விசாரணை
Reviewed by Author
on
December 26, 2022
Rating:

No comments:
Post a Comment