மன்னார்- வங்காலையில் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 38 ஆம் ஆண்டு நினைவு-மன்னார் ஆயர் தலைமையில் விசேட திருப்பலி.
மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (6) காலை இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது படுகொலை செய்யப்பட்ட அமரர் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதன் போது அருட்தந்தையுடன் சேர்ந்து இன்னுயிர் நீத்த உறவுகளுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து வங்காலை பங்குத்தந்தை அருட்பணி ஜெயபாலன் அடிகளாரின் தலைமையுரையில் அமரர் மேரி பஸ்ரியன் அடிகளாரின் குருத்துவ சமூகப் பணி வாழ்வு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் மற்றும் அவருடன் சேர்ந்து உயிர் நீத்தவர்களின் 38 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இரத்ததான நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது
மன்னார்- வங்காலையில் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 38 ஆம் ஆண்டு நினைவு-மன்னார் ஆயர் தலைமையில் விசேட திருப்பலி.
Reviewed by Author
on
January 06, 2023
Rating:

No comments:
Post a Comment