அண்மைய செய்திகள்

recent
-

இரு குழுக்களுக்கு இடையே மோதல்! ஒருவர் பலி!

பெத்தியாகொட பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், மூவர் ராகம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

 களனி பெத்தியாகொட பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுயவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த தகராறிற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு குழுக்களுக்கு இடையே மோதல்! ஒருவர் பலி! Reviewed by Author on January 08, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.