அண்மைய செய்திகள்

recent
-

2018ஆம் ஆண்டு 2 வயது சிறுமியைக் கொன்ற விபத்தை மறைத்ததற்காக தந்தையும் மகளும் கைது

பதுளைப் பிரதேசத்தில் தேயிலை பறிக்கும் தொழிலாளியின் 2 வயது சிறுமியின் விபத்தை மறைத்த தந்தையும் மகளும் நான்கு வருட காலப்பகுதியின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது வீட்டு முன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சந்தேக நபரான பெண் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியில் மோதியதில் உயிரிழந்துள்ளதாக பதுளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

 சந்தேகநபர்கள் இருவரும் இணைந்து குழந்தையின் சடலத்தை பிரதான வீதியில் வீசி வீதி விபத்தில் உயிரிழந்ததாக நிரூபித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், பதுளை முத்துமல பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த நான்கு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் விபத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பதுளை முத்துமல பிரதேசத்தைச் சேர்ந்த 78 மற்றும் 43 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


2018ஆம் ஆண்டு 2 வயது சிறுமியைக் கொன்ற விபத்தை மறைத்ததற்காக தந்தையும் மகளும் கைது Reviewed by Author on January 01, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.