மன்னார் அச்சங்குளம் கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை பிடித்த 9 பேர் கடற்படையினரால் கைது.
பல்வேறு வகையான சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்காக மன்னார் தீவைச் சூழவுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 25 வயதுக்கும் 58 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மன்னார் அச்சங்குளம் கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை பிடித்த 9 பேர் கடற்படையினரால் கைது.
Reviewed by Author
on
January 06, 2023
Rating:

No comments:
Post a Comment