இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவிப்பு- தடையேற்படுத்திய தொழிற்சங்க தலைவர்களுக்கு கட்டாய விடுமுறை
நாட்டில் வழமையான எரிபொருள் விநியோகம் மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனைய ஊழியர்கள் இன்று கடமைக்கு சமூகமளிக்காவிட்டால், ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுமுறையில் சென்றவர்களாக கருதப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று முதல், இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபன வளாகம், இலங்கை பெற்றோலியம் சேமிப்பு முனைய சேவை வளாகம் என்பன அவர்களுக்கு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அனைத்து ஊழியர்களும் சேவைக்கு சமூகமளித்து எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சேவைகளை தொடர வேண்டும் எனவும் அந்த விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவிப்பு- தடையேற்படுத்திய தொழிற்சங்க தலைவர்களுக்கு கட்டாய விடுமுறை
Reviewed by NEWMANNAR
on
March 29, 2023
Rating:

No comments:
Post a Comment