12,000 ரூபா போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது!
கைது செய்யப்பட்ட இருவரும் கிண்ணியா பெரியாற்றுமுனை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர்கள் எனவும் பொலிசார் குறிப்பிட்டனர்.
குறித்த நபர்களிடமிருந்து 12,000 ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணினி மற்றும் அச்சு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இருவரையும் கிண்ணியா சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கிண்ணியா பொலிஸ் நிலையப் பொருப்பதிகாரி WHCK பெர்னான்டோ குறிப்பிட்டார்.
இவ்வாறு போலியாக அச்சிடப்பட்ட 88 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள்கள் கிண்ணியாவில் புழக்கத்தில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் அவ்வாறான போலி நாணயத்தாள்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக செயல்படுமாறும் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
12,000 ரூபா போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது!
Reviewed by Author
on
March 06, 2023
Rating:

No comments:
Post a Comment