அண்மைய செய்திகள்

recent
-

காரைதீவில் முச்சக்கரவண்டியுடன் உழவு இயந்திரமும் மோதி விபத்து : பெண்ணொருவர் பலி !

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு சண்முக வித்தியாலயத்திற்கு முன்னால் இன்று முச்சக்கரவண்டியும் உழவு இயந்திரமும் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியில் பிரயாணம் செய்த மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த மீராமுகைதீன் பாத்தும்மா (வயது 66) என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்தில் இறந்த பெண்ணின் அக்கரைப்பற்று மகளின் வீட்டிற்குச் செல்லும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக காரைதீவு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர். குறித்த விபத்தானது அறுவடை செய்த நெல்லை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


காரைதீவில் முச்சக்கரவண்டியுடன் உழவு இயந்திரமும் மோதி விபத்து : பெண்ணொருவர் பலி ! Reviewed by Author on March 03, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.