அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடுவில் மின்னல் தாக்கி வயோதிபப் பெண் பலி

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (25) மாலை மின்னல் தாக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (25) மாலை   நிலவிய சீரற்ற காலநிலையின் போது தனது வீட்டு வளாகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

  பத்மநாதன் தெய்வானை (வயது-62) என்ற வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

சம்பவ இடத்திற்கு சென்ற  மடு பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் மடுவில் மின்னல் தாக்கி வயோதிபப் பெண் பலி Reviewed by NEWMANNAR on April 25, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.