சிறைச்சாலைகளில் இடநெருக்கடி : கோபா குழு தெரிவிப்பு!
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நெரிசல் 300 முதல் 400 வீதம் வரை அதிகரித்துள்ளதாக கோபா குழு தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11,762 கைதிகள் மட்டுமே அடைக்கப்படக்கூடிய நிலையில், தற்போது 26,791 கைதிகள் உள்ளதாக கோபா குழு தெரிவித்துள்ளது.
இதனால், சிறைச்சாலைகளில் நெரிசல் 259 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில சிறைகளில் நெரிசல் 300 முதல் 400 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் கோபா குழு தெரிவித்துள்ளது.
17,502 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளடன், 9,289 பேர் தண்டனைக் கைதிகளாக உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் இடநெருக்கடி : கோபா குழு தெரிவிப்பு!
Reviewed by Author
on
June 14, 2023
Rating:
Reviewed by Author
on
June 14, 2023
Rating:


No comments:
Post a Comment