அண்மைய செய்திகள்

recent
-

மடு வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த வெள்ளி விழா நிகழ்வும் சாதனையாளர்கள் கௌரவிப்பும்.

 மடு வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த வெள்ளி விழா நிகழ்வும் சாதனையாளர்கள் கௌரவிப்பும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) மாலை ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.


மடு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ஏ.கே.வொலன்ரைன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எம்.பற்றிக் டிறஞ்சன்,சிறப்பு விருந்தினராக தி.ஜோண் குயின்ரஸ் மற்றும் கௌரவ விருந்தினர்களாக முன்னாள் மடு வலயக்கல்விப் பணிப்பாளர் களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது மடு கல்வி வலயத்தில் 2022 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளி க்கு மேல் பெற்ற மாணவர்கள்,க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 5 ஏ சித்திக்கு மேல் பெற்ற மாணவர்கள்,மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்க பட்டனர்.

மேலும் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது.

















மடு வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த வெள்ளி விழா நிகழ்வும் சாதனையாளர்கள் கௌரவிப்பும். Reviewed by Author on October 02, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.