அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை கோடாவுடன் இளைஞர்கள் இருவர் கைது

 நாவற்காடு பிரதேசத்திலுள்ள கூளாமுறிப்பு காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றில் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர் இருவரை கைது செய்துள்ளதுடன் அங்கிருந்து 760 லீற்றர் கசிப்பு, உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 4 கோடாவினையும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

முல்லைத்தீவு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு நாவற்காடு பிரதேசத்திலுள்ள கூளாமுறிப்பு காட்டுப்பகுதியில் நேற்று (14.10.2023) சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தினை சுற்றிவளைத்த பொலிசார் அங்கிருந்த 760 லீற்றர் கசிப்பு, உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சட்டவிரோத கோடாவினையும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்த 30, 32 வயதுடைய இளைஞர்கள் இருவரையும் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் பின்னர்  நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் முல்லைத்தீவு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.




முல்லைத்தீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை கோடாவுடன் இளைஞர்கள் இருவர் கைது Reviewed by Author on October 15, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.