அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் போதையில் வாகனம் செலுத்திய இ.போ.ச சாரதிக்கு விளக்கமறியல்

 மன்னார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான போரூந்தை   மது போதையில் ஓட்டி சென்ற சாரதி யை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான்  இன்று(19) உத்தரவிட்டுள்ளார்.


மன்னார் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை (18) மாலை  தலைமன்னார் நோக்கி பயணிகளுடன்  சென்ற பேருந்தின் சாரதி குடிபோதையில் வாகனத்தை செலுத்திய நிலையில் மன்னார் போக்குவரத்து பொலிஸாரால் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை மன்னார் வைத்தியசாலை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த சாரதி குடிபோதையில் வாகனத்தை செலுத்தியமை உறுதி செய்யப்பட்ட நிலையில் சாரதியை இன்றைய தினம் வியாழக்கிழமை (19)  மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த சாரதி யை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.






மன்னாரில் போதையில் வாகனம் செலுத்திய இ.போ.ச சாரதிக்கு விளக்கமறியல் Reviewed by Author on October 20, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.