அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மக்களுக்கான உரிமை போரில் உயிரிழந்த மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு ஒன்று இன்று காலை இடம்பெற்றது

 தமிழ் மக்களுக்கான உரிமை போரில் உயிரிழந்த மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு ஒன்று இன்று காலை இடம்பெற்றது 


முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு பிரதேசத்தில்குறித்த மாவீரர்  பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.

மாவீரர்களின் பெற்றோர்கள்  அழைத்துவரப்பட்டு சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட கொட்டகைகளில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கான பொது திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது 150 வரையான மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்நிர்மலநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார்.














தமிழ் மக்களுக்கான உரிமை போரில் உயிரிழந்த மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு ஒன்று இன்று காலை இடம்பெற்றது Reviewed by Author on November 25, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.