அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் அரசபேருந்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து. இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி.

 முல்லைத்தீவில் அரசபேருந்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து. இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி.



முல்லைத்தீவு சிலாவத்தை  பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நேற்று (15.01.2024) மாலை  இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்து சிலாவத்தை சந்திக்கு அண்மித்த போது பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் இ.போ.ச பேருந்துடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கள்ளப்பாடு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

இ.போ.ச பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.














முல்லைத்தீவில் அரசபேருந்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து. இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி. Reviewed by வன்னி on January 16, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.