வரலாற்று பொங்கல் நிகழ்வில் வரலாறு காணாத நடன ஆற்றுகையை நிகழ்த்திய கிழக்குமாகாண பாடசாலை மாணவர்கள்.
வரலாற்று பொங்கல் நிகழ்வில் வரலாறு காணாத நடன ஆற்றுகையை நிகழ்த்திய கிழக்குமாகாண பாடசாலை மாணவர்கள்.
கிழக்குமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் 2024ம் ஆண்டுக்காண பொங்கல் விழா நிகழ்வுகள் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் கடந்த 4 நாட்களாக திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களின் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் இறுதி நிகழ்வுகள் சிறம்பாக இடம்பெற்று வருகிறது. இந்நிகழ்வில் கௌரவ அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் வருட கிழக்குமாகாண பொங்கல் நிகழ்வில் இலங்கையில் வரலாறுகாணாத ஜல்லிக்கட்டு விளையாட்டு இலங்கை இந்திய ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் ஒத்துளைப்புடன் சம்பூர் மண்ணில் நடத்தப்பட்டது யாவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து மாபெரும் படகோட்டப்போட்டி கிண்ணியாவிலே நடைபெற்றது.
இன்றைய தினம் 1000ம் பானைகள் பொங்கப்படும் பொங்கல் போட்டி, மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான குழு ரீதியான கோலப்போட்டி மற்றும் சிலம்பம் போட்டி என்பன இடம்பெறுகின்ற வகையில் மேலும் ஒரு வரலாற்று சாதனை நிகழ்வாக 1500 பாடசாலை மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது. இந் நடன ஆற்றுகை நிகழ்வு சிறப்பான முறையில் கிழக்குமாகாண கல்வித்திணைக்களத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டு ஆற்றுகை செய்யப்பட்டது. இவ் நடன நிகழ்வின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்ட பாடசாலைகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்குபற்றியிருந்தனர்.
Reviewed by வன்னி
on
January 08, 2024
Rating:










No comments:
Post a Comment