அண்மைய செய்திகள்

recent
-

கல்முனையில் சிறப்பாக இடம் பெற்ற முதலுதவி பயிற்சி பட்டறை

கல்முனையில் சிறப்பாக இடம் பெற்ற முதலுதவி பயிற்சி பட்டறை 

மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்கா மற்றும் YMMA மாவடிப்பள்ளி கிளையின் ஏற்பாட்டில் நேற்று KDMC நெனசல கல்முனையில் நடைபெற்றது. 


 மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளரும், YMMA மாவடிப்பள்ளி கிளையின் தலைவரும், புனித சென்ஜோன்ஸ் படைப்பிரிவின் கல்முனை கோட்டத்தின் அத்தியட்சகருமான எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சென்ஜோன்ஸ் படைப்பிரிவின் ஆணையர் கெப்டன். எம். டி. நௌசாத் வபி பிரதான வளவாளராக கலந்து கொண்டு அமைப்பின் உயர் பீட மற்றும் பிரதேசங்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு முதலுதவி பற்றி விரிவுரையாற்றினார். 


 இந் நிகழ்வில் அகில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் அதிபர் எம். ஐ.எம். றியாஸ் பிரதம அதிதியாகவும் YMMA சம்மாந்துறை கிளையின் தலைவர் ஐ.எல்.சம்சுதீன் மற்றும் புனித சென்ஜோன்ஸ் படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை கோட்டத்தின் அத்தியட்சகர் எம். ஹூசைன் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டதோடு பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் இதன் போது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



கல்முனையில் சிறப்பாக இடம் பெற்ற முதலுதவி பயிற்சி பட்டறை Reviewed by வன்னி on January 29, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.