அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்

 தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்-இலங்கையிலிருந்து சென்ற  அகதிகளின் எண்ணிக்கை  293 ஆக உயர்வு.


இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஒன்றாம் மணல் தீடையில் தஞ்சமடைந்துள்ள நிலையில் இன்று புதன்கிழமை (7) காலை அவர்களை மீட்டு  மரைன் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக  அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் முதல்  இலங்கையில் இருந்து இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.


இந்நிலையில் இலங்கை வவுனியா  மாவட்டம் நெடுங்குழி பகுதியை நந்தகுமார்  அவரது மனைவி  மற்றும் அவரது 3 குழந்தைகள்

 என ஒரே குடும்பத்தை சேர்ந்த  5 பேர் நேற்று (6) மாலை மன்னாரில் இருந்து ரூ.1.50லட்சம்  கொடுத்து    படகில் புறப்பட்டு இன்று (7) அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள  தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் கடற்கரையில்  வந்திறங்கினர்.


தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


விசாரணையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து அத்தியாவசிய பொருட்களின் விலை சற்று குறைந்த வந்த நிலையில் தற்போது மீண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளுடன்  இலங்கையில் வாழ வழி இன்றி  தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர்.


பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 5 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.


 பொருளாதார நெருக்கடி காரணமாக  தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை  293 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம் Reviewed by வன்னி on February 07, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.