மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கசிப்பு உற்பத்தியும் குடும்ப வன்முறைகளும்
மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள குருவில் கிராமமானது 60 குடும்பங்களைக் கொண்ட ஒரு சிறிய கிராமமாகும். இங்குள்ளவர்கள் பிரதானமாக கூலித்தொழிலையும் நன்னீர மீன்பிடியையும் வாழ்வாதாரமாக கொண்டிருந்த போதிலும் கிட்டத்தட்ட 50 க்குற்பட்ட குடும்பங்கள் கசிப்பு உற்பத்தி தொழிலையும் பிரதானமாக கொண்டுள்ளதோடு பாடசாலை இடை விலகிய சிறுவர்களையும் இளஞர்களையும் கசிப்பு விற்பதற்க்கு ஈடுபடுத்துகின்றனர். இது சம்பந்தமாக தகுந்த திணைக்களங்களுக்கு முறையிட்டதன் பயனாக கடந்த ஒக்டோபர் மாதம் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசாரின் தேடுதல் நடவடிக்கையின் போது கசிப்பு விற்பவர்களில் சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போதிலும் பினையில் வெளியே வந்து மீண்டும் கசிப்பு உற்பத்தி தொழிலையே பிரதான வாழ்வாதாரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன் விளைவாக இக்கிராமத்தில் மட்டுமல்லாமல் அயல் கிராமத்தில் இருந்தும் இங்கு மது அருந்த வருவதோடு அவர்களுடைய கூலித்தொழிலில் உழைக்கின்ற முழுப்பணத்தையும் இதில் செலவழிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் மனைவிமாரோடும் சண்டை இடுவதன் காரணமாக அந்த குடும்பத்திலுள்ள சிறுவர்கள் உளவள பாதிப்புக்கு உட்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் பாடசாலையையும் இடை விலகுகின்றனர். அத்தோடு இக் கிராமத்திலுள்ள பெண்கள் வெளியில் நடமாடுவதற்க்கு அஞ்சப்படுகின்றனர். இதை கட்டுபடுத்தாத காரணத்தினால் குடி போதைக்கு ஆளாக்கப்படும் இளைஞர்களின் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அத்தோடு இது தொடர்பாக முறைப்பாடு செய்பவர்களுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. எனவே பாதிக்கப்பட்ட குடும்ப பெண்கள் துறைசார்ந்த திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகள் கசிப்பு உற்பத்திக்கு எதிராக உடனடிக்கையாக நடவடிக்கை எடுத்து சிறார்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க
வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றனர்
.
.jpg)
1 comment:
ஈச்சளவக்கை கிராமம்தான் கசிப்பு உற்பத்தியில் முன்னிற்கிறது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
Post a Comment